பாடல் பற்றிய விவரங்கள்
இசைஅமைப்பாளர் : அனிருத்
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன்
பாடலாசிரியர் : தனுஷ்
வருடம் : 2012
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா..இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா..என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே..தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன்..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை..மெதுவாக
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
நிழல் தரும்
இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே
உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் பாரும் உன்னால்
மணல் இன்றி குளிர் வீசும்
இது எந்தன் siru வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே..தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன்..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை..மெதுவாக
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா..இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா.. ஓ.. ஓ... ஓ...

